உன்
நினைவுகளே
என்
பொக்கிஷமாய்..
நீ
என்னருகில்
இல்லாவிடிலும்
நித்தமும்
உன்
நினைவுகளில்
வாழும்
பாக்கியம்
போதும்...
உன்
வாழ்க்கை
உனக்கு
வசப்படட்டும்...
கசப்புகள்
நிறைந்த
என்னையும்
என்
நினைவுகளையும்
நிம்மதியுடன்
தூக்கிலிடு...
இறத்தல்
புதிதில்லை
எனக்கு..
காதல்
எனக்கு
எட்டா
கனியாய்
எப்போதும்...
ஏமாறுவேன்
எனத்
தெரிந்தே
ஏமாறும்
எனை
என்
செய்ய....
காலம்
கடந்த
என்னை
உன்
நினைவுகள்
கரையேற்றும்...
வாழ்க
நீ
என்றென்றும்....
உன்
தூக்கத்தை
கெடுக்க
நானில்லை
நீ
உறங்கு
நிம்மதியாய்....