Wednesday, May 20, 2020

நீ

கனவுகளை
என்னுள்
சேர்த்தும்
கோர்த்தும்
நித்தமும்
புத்தியாய்
உன்னை
சுற்றிய
காலமது...

பட்டாம்பூச்சியாய்
திரிந்த
என்னுள்
வண்ணத்பூச்சி
போல்
பல
அழியா
வண்ணங்களைத்
தீட்டினாய்....

உன்
அன்பால்
அறிவால்
என்னை
அனுதினமும்
அணைத்துக்
கொண்டாய்.....

வசந்தங்களை
என்னுள்
வாரி
இறைத்தாய்
நீ

அன்னையை
இழந்த
கைக்குழந்தை
போல்
ஏக்கத்துடன்
என்றுமே
நான்....

பரவசத்தை
என்னுள்
தந்தாய்

காதலின்
காதலாய்
வந்தாய்

நொடிக்கு
நொடி
உன்னை
நேசிக்க
கற்றுத்
தந்தாய்

நீயின்றி
நானில்லை
என
புரியவைத்தாய்

புலம்பெயர்தல்
பெயரளவில்
வாழ்தல்
இனிது
உன்னுடனான
வாழ்க்கை....

Sunday, May 10, 2020

பேரழகு

எத்தனைமுறை
பார்த்தாலும்
திரும்ப
திரும்ப
திரும்பி
பார்க்க
வைக்கிறது
உன்
பேரழகு.....

உயிர்

என்
உதடுகளின்
உரசலில்
உயிர்பித்தது
உன்
பெயர்....

Friday, May 8, 2020

அழைப்பு

உன்
ஒற்றை
அழைப்பிற்கு
எத்தனை
ஜென்மம்
காத்துகிடக்குமோ
இந்த
இதயம்.....

மனசு

தொலைந்து
போகிறது
மனசு
தேவதை
உன்னை
ஒவ்வொரு
முறை
பார்க்கையிலும்......

Saturday, May 2, 2020

அவள்

விடியல் 
காலையில்
விரிந்திடும்
சூரியனாய்
உன்
விழிகள்.....

என்ன என்ன
எனக்கேட்கும்
புருவங்கள்....
என்னை
எப்போதும்
இடைமறிக்கும்
அவை.....

அவள்
அழகை
மொத்தமாய்
பிரதிபலிக்கும்
உதடுகள்....

வானவில்
மூக்கு
வனப்பின்
வசந்தங்களாய்

பசிக்கும்
போது
பசியற்றும்
கண்ணங்கள்

அணுகுண்டாய்
கண்கள்
பார்க்கும்
போதெல்லாம்
வெடித்து
சிதறுகிறேன்

பிரம்மன்
சற்று
மோசம்
என்னிடத்தில்
கஞ்சியாகவும்
உன்னிடத்தில்
இவ்வளவு
தாராளமாய்
இருப்பதேன்

கேள்வியாய்
அவள்
காது
மடல்கள்....

பார்த்த
என்னையும்
அப்படி
வளைக்கிறது

அவள்
அப்படி 
என்ன
மதிமயக்கியா????
ஆம்
என்னுடல்
மட்டும்
இப்போது
தனித்து
இயங்குகிறது