Monday, December 31, 2018

என்னவளே...

என்னவளே...
இரவில்
உன்
ஸ்பரிசத்தில்
கலந்து
விடியலில்
நான்
தொடங்கும் ...
ஒவ்வொரு
நாளும்
புது வருடம்தான்.....
எனக்கு..

புத்தாண்டு

என்
நாட்பூக்களில்
நல்ல
நட்புக்களை
அதிகம்
பூக்கவைத்தாய்...
அன்புள்ளங்களோடு
அரவணைத்து
ஆனந்தப்பட்டாய்...

பழைய
நாட்களைப்
போல்
வரும்
நாட்களும்
ஆண்டுகளும்
இனிதாய்
உங்களைப்போல்..

இனிய
புத்தாண்டே
வருக
இன்பத்தை
மட்டும்
தருக...
புத்தாண்டு
வாழ்த்துக்கள்...

அன்புடன்
வீ.சு.சரவணமணி
பொதுப்பணித்துறை
98427 66788...

Wednesday, July 18, 2018

எழுதிங்கள்

கண்ணே
கண்மணியே
கனியமுதே
குலவிளக்கே
குலம் காக்கும்
விடிவெள்ளியே...(குலமகளே)

உன்னை
சுமக்கையில்
தெரியவில்லை
நீ
ஆணா
பெண்ணா
என்று...
அன்பே
நான்
உறுதியாய்
இருந்தேன்
தேவதை
நீ
அவதரிப்பாய்
என்று...

அன்பெனும்
அமுதாய்
என்னுள்
ஆர்ப்பரித்தாய்
புது வெள்ளமாய்
புதுரத்தமாய்
பிறப்பேடுத்தாய்
எனக்குள்....

என்னை
உன்
வழிகாண
வாய்ப்பளித்தாய்...

உன்
தேகத்தை
அலங்கரிக்க
வானவில்லை
வளைத்திருந்தேன்...
விண்மீனும்
வெக்கட்பட்ட
காட்சிகள்தான்
ஏராளம்...
நிலவுக்குப்
பொறாமை
கண்மணியே
உன்னழகைக்கண்டு......

உன் மொழி என் மொழி
என் மொழி உன் மொழி
நம் மொழி
தமிழ் தானே
என் தாலாட்டும்
தமிழ் தானே...

தன்னை
மறந்து
உன்னைப்
போற்றும்
தகப்பனும்
நீ
அறிவாய்...

ஆனந்த
கண்ணீராய்
பொங்கிடும்
நீருற்றாய்
அன்பின்
அலப்பரிய
அப்பா
உன்
கையிடுக்கில்...

அண்ணன்
ஒரு
மந்திர சொல்
நீ
உச்சரிக்கும்
சத்ததில்
சாபங்கள்
விலகிவிடும்...
வலி யாவும்
நீங்கிவிடும்
உன்
அண்ணன்
உனக்கானவன்....

கொலுப்பூச்சிகள்
ஒலிக்க
குறுநடை
நடந்து
என்
நெஞ்சத்தை
வருடும்
என்
அன்னையே....

இயற்கையின்
இடைவிடா
நிகழ்ச்சிகளில்
உன்
வளர்ச்சி
பெரும்
வளர்ச்சி....

உள்ளங்கை
குழிவிருந்து
இறக்கிவிடு
எனத்துடித்த
விதைகள்
போல்
விரியமாய்
வளர்கிறாள்
என்
செல்லமகள்....

பேதை
நீ
இன்று
பெதும்பையானாய்...

நன்நாளாய்
வந்தது
உன்
எழுதிங்கள்
சீராட்டு....

உற்றார்
உறவினர்
சொந்தங்கள்
புடைசூழ
குறித்த
நன்னாளில்...

சந்திரன்
தலைதூக்கும்
மாலை
மதிநேரம்
நம்
அருமைக்காரர்
முகூர்த்தக்கால்
நட்டுவைத்தே
இந்த
எழுதிங்கள்
வைபோகம்
அரங்கேற்றம்
ஆரம்பம்....

கற்பு குலையா
வேற்ற குலையா
காப்பு குலையா
வம்சம்
ஆல்போல்
தழைத்து
அருகுபோல்
வேறுன்றி....

பட்டிமரவு
எலந்த மரம்
குடைமரவு
நுகம்
கொலவு
குழவிலிங்கம்
உரல்லிங்கம்
அம்மி
நிறைக்குடம்
பொடைச்சட்டி
வானைச்சட்டி
உடனாய்
உன்
அண்ணன்
தம்பிகளை
அழைத்து
என்
தாய்வீட்டில்
கண்மணி
உனக்கு
புதுமணி
நீ
உடுத்த
விரத விருந்து
வைத்து....

புதுப்பானை
போற்றியேடுத்து
என்
வம்ச
எழுதிங்கள்காரிகள்
ஏழு கிணற்றுநீரேடுத்து
கங்கணம் கட்டி
மூன்று முறை
அரிசிபோட்டு
கணபதி
பூசை செய்து..

வாசல்
தொளித்து
வண்ணக்
கோலமிட்டு
செம்மண்
கரைகட்டி
பூமகளே
உனக்கு
வெற்றிலை
பாக்கு வைத்து...

ஐந்துபடி
திணை
மாவில்
நீர்விட்டு
நன்குறுட்டி
இருகூராக்கி
இடையே
அச்சுவெல்லமிட்டு
மாவால் மூடி
அரச இலையிட்டு
உன்
அண்ணன்
பொடைசட்டி
எடுத்து
அடுப்பில்
கோதைமாவை
வேகவிட...
குமரி உன்னை
மர உரல்
முன்னிறுத்தி
உன்
அண்ணன்
எலந்தமுள்
குடை பிடிக்க
நாவிதன்
கொழுமுளை காய்ச்சி
கனியமுதே
வெண்மணியே
உன்முன்
வைத்து
சுடச்சுட
மோர்விட
மங்களமே
மணிமேகலையே
உன்
மணிக்காலால்
உரலை
உதைத்து
உள்
வந்தாய்.....

நங்கை
கொழுந்தியாள்
என
நால்வரும்
புடைசூழ
குழவிகல்
எடுத்து
உன்
மடியிலிட்டு
ஆக்கைக்கு
நீருற்றி
பட்டிமாவு
பந்தலில்
விரதம்
முடித்து
விருந்து
வைத்தோம்...
விருந்தோம்பல்
விடைபெற்று
அதிகாலை
அடி எடுக்க...
அருமைக்கு
நீயிருக்க
அருமைக்காரி
உடனிருக்க...

வீட்டுவாசல்
நிலவுமேல்
பேழை
கூடையில்
வைத்திருந்த
கோதைமாவை
கோடாரி
துணை
கொண்டு
இரு கூறாய்
பிளந்தாய்
நீயும்...

மா நடுவில்
செங்கல்லாய்
இருமாப்பாய்
நீ
வைத்த
வெல்லமும்
கரையாமல்
உன்
கற்புக்கு
களங்கரையாய்
வேளிர்
குலம்
காத்தாய்
என்
குலமகளே....

சீர்காரி
நீ
சமைத்து
நம்
சொந்தங்கள்
சுவையாற
எழுதிங்கள்
முடிந்தது
சீரும்
சிறப்பாய்....

Thursday, June 14, 2018

காற்று

காற்றும்
காதலும்
அப்படி
தான்
கடந்த பின்னும்
வாசம்
வீசிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில்
இறக்காதப்
பக்கங்கள்...
நான்
இறந்தபின்னும்

நான்

நான்
காணும்
வண்ணங்களும்
வடிவங்களும்
நின்னை
ஆர்பரித்து
என்னுள்
உன்னை
சேர்கிறது...

கனவுக்குள்
வாழ்வைத்
தொலைத்து
கண்களுக்குள்
விடை
தோடும்
வாழ்க்கை

காற்றில்
ஆடும்
நானலைப்
போல்
நானும்...
நிஜமும்
நிழலும்
இதயத்தின்
இருபக்கம்
இருக்க
என்செய்வேன்

அறிவின்
விழம்பின்
நீயும்
காற்றின்
காதலானாய்
நானும்...

இதயத்தின்
துடுப்பே
உன்
நினைவுகளும்
நீ
தரும்
கனவுகளும்...

இதயத்தின்
இடைவெளி
இந்த
கவிதை
குறைத்திடுமோ...

இதயத்தின்
இடமாற்றம்
கவிவழி
கைகூடும்...

தனிமையின்
தவிப்பில்
நானும்...

கேள்வியின்
வேள்வியில்
நீயும்...

கண்ணாமூச்சி
வாழ்க்கை...
வானவில்
வண்ணங்கள்
நிஜமா
நிழலா?...

நிழல்தரும்
சுகங்கள்
இளைப்பாற்றல்
இல்ல
வாழ்வேது...

சரியெது
தவறெது
இதயத்தின்
இயக்கம்...

வாழ்வின்
வசந்தங்கள்
ஒருசேர
கிடைத்ததோ
உந்தன்
வடிவில்...

காத்திருப்பின்
சுகம்
அலாதி...

Wednesday, June 13, 2018

கனவு

கனவுகள்
தானாடி
வாழ்க்கை
இதயத்தின்
துடிப்பே
உன்
நினைவுகளும்
நீ
தரும்
கனவுகளும்...

ஏன்

உன்
மகரந்தம்
என்
மனமரியும்...
மானுடத்தின்
மகத்தவம்
உன்
மந்தகாரத்தில்
உள்ளது
ஏழ்பிறப்பை
நம்பி
இப்பிறவியை
துறவேன்
உன்னோடு
நானும்...
உயிர் வரை
ஊணும்..

உன்னோடு

உன்
மகரந்தம்
என்
மனமரியும்...
மானுடத்தின்
மகத்தவம்
உன்
மந்தகரத்தில்
உள்ளது
ஏழ்பிறப்பை
நம்பி
இப்பிறவியை
துறவேன்
உன்னோடு
நானும்...
உயிர் வரை
ஊணும்..

ஆசை

உன்னை
சுற்றி
வரவே
ஆசை...

உன்
உச்சம் முதல்
மச்சம் வரை
நானாய்
இருக்க
ஆசை...

உன்
முத்தம் முதல்
மொத்தமாய்
இருக்க ஆசை...

இரவோ
பகலோ
என்றும்
உன்னில்
ஒழிந்து
கொள்ள
ஆசை...

உன்
வெக்கங்கள்
அனைத்தும்
எனதாக்க
ஆசை...

உன்னை
என்னுள்
ஒழித்து
வைக்க
ஆசை...

Saturday, June 2, 2018

இடைவெளி

இடைவெளி
இல்லா
இதயங்களின்
தூரம்
பல
மைல்கள்
இன்று...

என்
கருவிழி
முதல்
கானல்நீர்
வரை
என்றெல்லாம்
இன்று வரை
இதயத்தின்
மூலைமுடுக்கெல்லாம்
நான்
கானும்
அத்தனை
அம்சங்களிலும்
நீக்கமற
நிறைந்திருக்கிறாய்

Saturday, May 12, 2018

என்றென்றும் நீ

நெஞ்சம்தன்
எண்ணங்கள்
காதலுடன்
கலந்துவிட...
வண்ணத்தின்
எச்சங்கள்
கண்ணீரில்
கரைந்துவிட...

வலிகள்தரும்
சுகங்கள்
ஏராளம்
வலியின்றி
நீயில்லை
நீயின்றி
நானில்லை

ஏக்கம்

உன்னோடு
சேரத்துடிக்கும்
ஒவ்வொரு
நொடிகளும்
ஒருயுகமேன
கலியும்
காலங்கள்...

விடுமுறை
விட
உன்
நினைவுகள்
நீங்காமல்
நிலைத்திருக்கும்...

நீடிக்கும்
ஒவ்வொரு
இரவும்
உன்
பரிசங்களின்
பரிச்சியத்தை
பறைசாற்றும்

Friday, May 11, 2018

ஆசை

என்
வானம்பாடி
வாழ்க்கையின்
விடிவெள்ளி
நீ...

ஆசைகள்
நிராசையாய்
எரிமலையாய்
நெஞ்சம்...

சில்லரை
ஆசைகள்
சிதரிய
தருணம்...

உன்
அன்பின்
அரவணைப்பில்
ஆழ்ந்து
உறங்கிடவே
ஆசை...

உன்
சின்ன
சிரிப்பில்
சிறைகொண்ட
என்னை
உன்
வாஞ்சையின்
வருடல்
தேற்றுமென
புரியாதா...

என்
வாழ்வின்
வண்ணங்கள்யாவும்
உன்
கலவையின்
வெளிப்பாடு...

Thursday, May 3, 2018

தவிப்பு

தவிக்கிறேன்
என்
தாயுமானவளை
தனித்திருப்பதற்கு..

Tuesday, May 1, 2018

இறப்பு

இறப்பே
இன்னமும்
தள்ளிப்போகாதே
தனிமையின்
தவிப்பு
ஆயிரம்
மரணத்திற்கு
சமம்...

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி
காதல்
இருக்கும்போது
உணராத
உன்
உன்னதம்
இறக்கும்வரை
இருந்துவிடும்
என்னுள்..

உணர்ந்திருப்பேன்...
உன்
உணர்வுகளை
என்னுள்

வாழ்க்கை

இலக்கணம்
இலக்கியம்
காதல்
கலவரம்
வாழ்க்கை
தேற்றல்
அனைத்துமாகி
இணைந்தும்
இணையாமல்
உன்னை
நினைத்து
உன்
நினைவுகளுடன்
வாழ்வது
வாழ்க்கை

Saturday, April 28, 2018

வலிகள்

வலிகளும்
வடுகளும்
மறையாது
கண்மணியே...

மரணம்
வரை
பயணிக்கும்
உன்
நினைவுகளும்
நித்திரையில்லா
இரவுகளும்
அதற்கு
சாட்சி

Tuesday, April 24, 2018

மன்னிப்பு

காத்திருப்பின்
அவசியம்
புரியும்...
எனக்கு...
உன்
ஒற்றை
மன்னிப்பிற்கு
ஓராயிரம்
ஆண்டு
காத்திருப்பேன்...

தண்டனைகள் இனிது

மறந்திருப்பேன்
என்று
நினைத்திருப்பாய்
நீ
என்
மரபணுவில்
கலந்துவிட்டாய்....
காலம்
கடந்தும்
என்னுள்
கரைந்திருப்பாய்....

என்
தோழியே
என்னை
ஏற்றுக்கொள்...

என்
ஒவ்வொரு
விடியலும்
உன்
நினைவுகளின்
நிசப்தத்தில்
தொடங்குகிறது....

ஏக்கத்தின்
எழவாயில்
நானும்
இன்று...

என்
உன்னதங்களில்
ஒன்றானது
உன்
தூய
நட்பு...

தவறுகள்
எனதானது
தண்டணைகள்
உனதானது....

என்
ஆயுள்
கடந்தும்
உன்
தண்டணைக்கு
காத்திருக்கிறேன்
என்னை
தண்டித்து
ஏற்றுகொள்...

Monday, April 23, 2018

பிரேமம்

உன்னோடு
இருந்தகாலங்கள்...

உன்
சுவாசம்
எனக்குள்ளும்
என்
சுவாசம்
உனக்குள்ளும்
மாற்றி க்கொண்ட
பருவமது...

பலநேர
பொழுதுகள்
உன்
பார்வைவீணைகளின்
இசையிலே
கடந்து
போயின....

மதிய
உணவில்
உன்
மகத்துவத்தை
உணர்ந்தவள்
நீ...

சில நேர
இடைவெளியை
தாங்காத
என் மனசு...
உன்னை
எப்படி
விட்டுக்கொடுத்தேன்
என
தெரியவில்லை...
என்
மரணம்
கூட
என்னை
மன்னிக்காது...

நட்பின்
உன்னதத்தை
ஒவ்வொரு
நொடியிலும்
காட்டியவள்
நீ...

கார்பன்காப்பி
கொண்டு
என்னை
படிப்பித்தவள்
நீ..

என்
காதலை
காட்டிக்கொடுத்த
கொச்சினே
வாழ்க..

என்
தாயாக
தோழியாக
ஏன்
என்னை
மதிக்கத்தக்கவனாக
மாற்றியவள்
நீ..

என்
இறுமாப்பு
இதயத்தில்
உன்னையேன்றி
யாருமில்லை...

என்
வறுமையை
உன் பலநேர
பாக்கெட்
மணிகள்
அடைத்திருக்கிறது...

என்
ஒவ்வொரு
அணுவிலும்
ஒழிந்து கொண்டு
பல்கி
பெருகி
விட்டாய்...

என்
மொத்தமும்
நீயாகி
விட்டாய்
இருந்துவிட்டுப்
போ
நான்
இருக்கும்வரையிலும்....

உன்னைப்
பிரிந்ததும்தான்
புரிந்து கொண்டேன்
என்னை
உனக்குள்
தொலைத்ததை....

என்
ஆயுளின்
கடைசிஆசையே
உன்னிடம்
மன்னிப்பு
கோருவது.  

கூனிக்குறுகி
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
அகம்
புறம்
என்றனைத்திலும்
இருந்தவள்...
இன்று
என்
அகத்தில்மட்டும்
ஆணியடித்து
என்னை
ஆட்கொண்டு
விட்டாள்....

என்
வெறுமையின்
வெற்றிடங்களை
உன்
நினைவுகொண்டு
நிரப்பிக்கொண்டிருக்கிறேன்...

உன்
நினைவுக்குவியல்
நான்....

Saturday, April 14, 2018

மானுடம்

என்
உடன்பிறப்புகளே...
உங்களை
மனிதரேன்றும்
புனிதரேன்றும்
நினைத்திருந்தேன்...
ஆனால்
நீங்களோ...
உங்களை
சாதி, மதமெனும்
போர்வைக்குள்
ஒழிந்து கொண்டு
உங்கள்
மனிதத்தை
தொலைத்தீர்கள்...

Sunday, March 18, 2018

விட்டில்பூச்சி..

நீ
பக்கத்தில்
இருந்திருந்தால்
பார்த்துக்கொண்டே
இருந்திருப்பேன்...
ன்னுயிரில்
குடிகொண்ட
குலவிளக்கே...
உன்
அழகென்னை
ஆட்டித்தான்
பார்க்கிறது...
என்
எண்ணமெல்லாம்
உனைச்சுற்றி...
விட்டில்பூச்சியேன
நானும்...
அழகே
ஆருயிரே...
சொல்லிவிடு...
ஏக்கத்துடன்
நானும்...
கண்மணியே
உனக்காக
நானும்....

Saturday, March 17, 2018

தேடல்....

பெண்ணே...
உன்விழிப்
பார்வையில்
என்னை
முற்றிலும்
தொலைத்து
விட்டேன்....
தேடுகிறேன்...
என்னை
உன்னில்.......

Thursday, January 4, 2018

கண்ணம்மா

வேஷம்
போட
ஏதுமில்லை
என்னுயிர்
கண்ணம்மா.... 
காணும்
இடமெல்லாம்
நீ.. 
காணும்
காட்சியெல்லாம்
நீ... 
பொய்யல்ல
என்
உயிரிலிருந்து
மெய்
கண்ட
உண்மை
நீ.....
உண்மையில்
என்னை
அறிந்தது
உன்னைத்
தவிர
வேறு
யாருமில்லை....