உன்னோடு
இருந்தகாலங்கள்...
உன்
சுவாசம்
எனக்குள்ளும்
என்
சுவாசம்
உனக்குள்ளும்
மாற்றி க்கொண்ட
பருவமது...
பலநேர
பொழுதுகள்
உன்
பார்வைவீணைகளின்
இசையிலே
கடந்து
போயின....
மதிய
உணவில்
உன்
மகத்துவத்தை
உணர்ந்தவள்
நீ...
சில நேர
இடைவெளியை
தாங்காத
என் மனசு...
உன்னை
எப்படி
விட்டுக்கொடுத்தேன்
என
தெரியவில்லை...
என்
மரணம்
கூட
என்னை
மன்னிக்காது...
நட்பின்
உன்னதத்தை
ஒவ்வொரு
நொடியிலும்
காட்டியவள்
நீ...
கார்பன்காப்பி
கொண்டு
என்னை
படிப்பித்தவள்
நீ..
என்
காதலை
காட்டிக்கொடுத்த
கொச்சினே
வாழ்க..
என்
தாயாக
தோழியாக
ஏன்
என்னை
மதிக்கத்தக்கவனாக
மாற்றியவள்
நீ..
என்
இறுமாப்பு
இதயத்தில்
உன்னையேன்றி
யாருமில்லை...
என்
வறுமையை
உன் பலநேர
பாக்கெட்
மணிகள்
அடைத்திருக்கிறது...
என்
ஒவ்வொரு
அணுவிலும்
ஒழிந்து கொண்டு
பல்கி
பெருகி
விட்டாய்...
என்
மொத்தமும்
நீயாகி
விட்டாய்
இருந்துவிட்டுப்
போ
நான்
இருக்கும்வரையிலும்....
உன்னைப்
பிரிந்ததும்தான்
புரிந்து கொண்டேன்
என்னை
உனக்குள்
தொலைத்ததை....
என்
ஆயுளின்
கடைசிஆசையே
உன்னிடம்
மன்னிப்பு
கோருவது.
கூனிக்குறுகி
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
அகம்
புறம்
என்றனைத்திலும்
இருந்தவள்...
இன்று
என்
அகத்தில்மட்டும்
ஆணியடித்து
என்னை
ஆட்கொண்டு
விட்டாள்....
என்
வெறுமையின்
வெற்றிடங்களை
உன்
நினைவுகொண்டு
நிரப்பிக்கொண்டிருக்கிறேன்...
உன்
நினைவுக்குவியல்
நான்....
No comments:
Post a Comment