Tuesday, April 24, 2018

தண்டனைகள் இனிது

மறந்திருப்பேன்
என்று
நினைத்திருப்பாய்
நீ
என்
மரபணுவில்
கலந்துவிட்டாய்....
காலம்
கடந்தும்
என்னுள்
கரைந்திருப்பாய்....

என்
தோழியே
என்னை
ஏற்றுக்கொள்...

என்
ஒவ்வொரு
விடியலும்
உன்
நினைவுகளின்
நிசப்தத்தில்
தொடங்குகிறது....

ஏக்கத்தின்
எழவாயில்
நானும்
இன்று...

என்
உன்னதங்களில்
ஒன்றானது
உன்
தூய
நட்பு...

தவறுகள்
எனதானது
தண்டணைகள்
உனதானது....

என்
ஆயுள்
கடந்தும்
உன்
தண்டணைக்கு
காத்திருக்கிறேன்
என்னை
தண்டித்து
ஏற்றுகொள்...

No comments:

Post a Comment