அன்பும்
அரவணைப்பும்
என்றென்றும்
என்னுடன்
உன்
அருகில்....
இரவும்
பகலும்
வருவதைப்
போல்
நீயும்
உன்
நிழலும்....
உன்
கருவிழி
இரண்டும்
என்னை
இப்படி
கொல்வதேன்
எத்தனை
காரணங்கள்
காரியங்கள்
என்ன
சொல்ல
எதை
சொல்ல
அமைதியின்
மொத்தமாய்
அவளும்...
எனக்கேன்
ஏக்கம்
சந்தோஷம்...
அவளை
பார்க்கையில்...
விசாரணை
தேவை
போலும்....
அவளின்
கண்களைக்
கேட்பதா??
என்னைச்
சுருட்டிய
அவளின்
கருங்கூந்தலைக்
கேட்பதா??
இல்லை
என்னை
சிறை
பிடித்த
அவளின்
சிந்தையை
கேட்பதா...
உனக்கு
ஆயுள்
தண்டனை
உறுதி...
உன்
பார்வையால்
என்னை
கொன்றுவிட்ட
கொலைகாரி....
விடிந்தும்
விடியாமலும்
வந்து
விடுகிறாய்...
சூரியனுக்கு
சரிபோட்டி
நீயடி..
சூரியனோ
என்னை
சுற்ற
உன்
நினைவுகள்
என்னைச்
சுற்ற
சுற்றலில்
கழியும்
வாழ்வெனக்கு....