Thursday, June 14, 2018

நான்

நான்
காணும்
வண்ணங்களும்
வடிவங்களும்
நின்னை
ஆர்பரித்து
என்னுள்
உன்னை
சேர்கிறது...

கனவுக்குள்
வாழ்வைத்
தொலைத்து
கண்களுக்குள்
விடை
தோடும்
வாழ்க்கை

காற்றில்
ஆடும்
நானலைப்
போல்
நானும்...
நிஜமும்
நிழலும்
இதயத்தின்
இருபக்கம்
இருக்க
என்செய்வேன்

அறிவின்
விழம்பின்
நீயும்
காற்றின்
காதலானாய்
நானும்...

இதயத்தின்
துடுப்பே
உன்
நினைவுகளும்
நீ
தரும்
கனவுகளும்...

இதயத்தின்
இடைவெளி
இந்த
கவிதை
குறைத்திடுமோ...

இதயத்தின்
இடமாற்றம்
கவிவழி
கைகூடும்...

தனிமையின்
தவிப்பில்
நானும்...

கேள்வியின்
வேள்வியில்
நீயும்...

கண்ணாமூச்சி
வாழ்க்கை...
வானவில்
வண்ணங்கள்
நிஜமா
நிழலா?...

நிழல்தரும்
சுகங்கள்
இளைப்பாற்றல்
இல்ல
வாழ்வேது...

சரியெது
தவறெது
இதயத்தின்
இயக்கம்...

வாழ்வின்
வசந்தங்கள்
ஒருசேர
கிடைத்ததோ
உந்தன்
வடிவில்...

காத்திருப்பின்
சுகம்
அலாதி...

No comments:

Post a Comment