Wednesday, May 20, 2020

நீ

கனவுகளை
என்னுள்
சேர்த்தும்
கோர்த்தும்
நித்தமும்
புத்தியாய்
உன்னை
சுற்றிய
காலமது...

பட்டாம்பூச்சியாய்
திரிந்த
என்னுள்
வண்ணத்பூச்சி
போல்
பல
அழியா
வண்ணங்களைத்
தீட்டினாய்....

உன்
அன்பால்
அறிவால்
என்னை
அனுதினமும்
அணைத்துக்
கொண்டாய்.....

வசந்தங்களை
என்னுள்
வாரி
இறைத்தாய்
நீ

அன்னையை
இழந்த
கைக்குழந்தை
போல்
ஏக்கத்துடன்
என்றுமே
நான்....

பரவசத்தை
என்னுள்
தந்தாய்

காதலின்
காதலாய்
வந்தாய்

நொடிக்கு
நொடி
உன்னை
நேசிக்க
கற்றுத்
தந்தாய்

நீயின்றி
நானில்லை
என
புரியவைத்தாய்

புலம்பெயர்தல்
பெயரளவில்
வாழ்தல்
இனிது
உன்னுடனான
வாழ்க்கை....

No comments:

Post a Comment