காதலே உன்னை விட முடியாது போலும்... உன்னை விட்டால் நானே இல்லை என்பதாலோ....
என்னுயிர் நீ தான் என்பேன்... உண்மைதான் என் சுவாசம் நீ அல்லவோ
முத்தத்தின் சத்தம் இன்னமும் பலமாய் என்னுள்...
உறவின் தொடர்கதையா இந்த ஒற்றை முத்தம்
எத்தனை பேர் என்னை சுற்றி இருந்தாலும் நீ இல்லையே என்னுடன்... என்ற வருத்தம் எப்போதும் என்னுள்...
உனக்குள் நானிருக்கிறேன் என்பதற்கு ஒரே சாட்சி உன் கண் .....
என் காதல் வெளியின் நட்சத்திரங்கள் உன் முகப்பருக்கள்
எங்கே இங்கே என்று எங்கு பார்க்கையிலும் உன் நியாபகங்களை தவிர்க்க இயலவில்லை என்னால்....