இளமையின்
இனிமையை
சித்திரங்களின்
சிந்தையின்
காமிக்ஸ்
காதல்.....
வயதில்
கல்கியின்
கல்வெட்டில்
காவியக்
காதல்....
பருவம்
முத்து
முதல்
தபூசங்கர்
வரை
கவியரின்
கற்பனை
மேல்
காதல்....
முப்பதின்
மூப்பில்
மனிதத்தை
கொண்டாடும்
கருத்தில்
காதல்....
பேசும்
பொழுதுகள்
பல
நேரம்
நல்ல
புத்தகங்கள்
பற்றியே.....
விடிந்ததும்
படித்த
புத்தகங்கள்
பல உண்டு....
என் காதலுக்கு
களவாண்ட
கவிஞர்கள்
ஏராளம்....
காலம்
கடந்தும்
காற்று
உள்ளவரை
பார்
புகழும்
பெண்களுக்கும்....
காப்பியம்
முதல்
கம்ப்யூட்டர்
வரை
எங்கும்
தடம்
பதிக்கும்
உலகில்
வீரநடை
போடும்
மங்கைகளுக்கும்...
மாதவரின்றி
இந்த
மானுடம்
இல்லை..
என்ற
உண்மை
உரைத்தவர்களுக்கும்....
அன்பு அறிவு
ஆற்றல்
இன்பம் இனிமை
ஈகை
உண்மை
ஊக்கம்
எளிமை
ஏற்றம்
ஐக்கியம்
ஒற்றுமை
ஓதுதல்
ஔடதம்
பொருகி
இந்நாளில்
செல்வமும்
செழிப்பும்
நிறைந்திட .....
பொங்கல்
வாழ்த்துக்கள்....
வீ.சு.சரவணமணி
பொதுப்பணித்துறை
ஈரோடு
9842766788
உன்
நினைவுகளே
என்
பொக்கிஷமாய்..
நீ
என்னருகில்
இல்லாவிடிலும்
நித்தமும்
உன்
நினைவுகளில்
வாழும்
பாக்கியம்
போதும்...
உன்
வாழ்க்கை
உனக்கு
வசப்படட்டும்...
கசப்புகள்
நிறைந்த
என்னையும்
என்
நினைவுகளையும்
நிம்மதியுடன்
தூக்கிலிடு...
இறத்தல்
புதிதில்லை
எனக்கு..
காதல்
எனக்கு
எட்டா
கனியாய்
எப்போதும்...
ஏமாறுவேன்
எனத்
தெரிந்தே
ஏமாறும்
எனை
என்
செய்ய....
காலம்
கடந்த
என்னை
உன்
நினைவுகள்
கரையேற்றும்...
வாழ்க
நீ
என்றென்றும்....
உன்
தூக்கத்தை
கெடுக்க
நானில்லை
நீ
உறங்கு
நிம்மதியாய்....
எதிலும்நீதான்
எனதல்ல
எதுவும்....
என்
வாழ்க்கை
கனவுகளை
என்னுள்
சேர்த்தும்
கோர்த்தும்
நித்தமும்
புத்தியாய்
உன்னை
சுற்றிய
காலமது...
பட்டாம்பூச்சியாய்
திரிந்த
என்னுள்
வண்ணத்பூச்சி
போல்
பல
அழியா
வண்ணங்களைத்
தீட்டினாய்....
உன்
அன்பால்
அறிவால்
என்னை
அனுதினமும்
அணைத்துக்
கொண்டாய்.....
வசந்தங்களை
என்னுள்
வாரி
இறைத்தாய்
நீ
அன்னையை
இழந்த
கைக்குழந்தை
போல்
ஏக்கத்துடன்
என்றுமே
நான்....
பரவசத்தை
என்னுள்
தந்தாய்
காதலின்
காதலாய்
வந்தாய்
நொடிக்கு
நொடி
உன்னை
நேசிக்க
கற்றுத்
தந்தாய்
நீயின்றி
நானில்லை
என
புரியவைத்தாய்
புலம்பெயர்தல்
பெயரளவில்
வாழ்தல்
இனிது
உன்னுடனான
வாழ்க்கை....
எத்தனைமுறை
பார்த்தாலும்
திரும்ப
திரும்ப
திரும்பி
பார்க்க
வைக்கிறது
உன்
பேரழகு.....