Friday, January 18, 2019

Mango Rhyme

Oh My Mango
Bubbly Sweetee...

Oh My Mango
Richy Juicy...

Oh My Mango
Such a Tastee...

Oh My Mango
Anti Fattee...

Oh My Mango
Lovely Greeny..

Oh My Mango
Fasty Burnee..

Oh My Mango
Biggy Genus...

Monday, January 14, 2019

பொங்கல்

பழையன
கழிதலும்
புதியன
புகுதலும்
இயற்கையின்
நியதி...
கதிரவன்
துணைகொண்டு
தைமாதம்
அடி எடுக்க
நம்
அவலங்கள்
விலகும்...
வாழையடி
வாழையாய்
வாழ்வாங்கு
வாழ்வோம்
பல்லாண்டு...

தித்திக்கும்
பொங்கல்
செய்து...
திகட்டாத
நம்
அன்பால்
உற்றார்
உறவினரோடு
மகிழ்ச்சியை
பரிமாற
இனிய

பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!

என்றென்றும்..
வீ.சு.சரவணமணி
பொதுப்பணித்துறை
9842766788...

Monday, December 31, 2018

என்னவளே...

என்னவளே...
இரவில்
உன்
ஸ்பரிசத்தில்
கலந்து
விடியலில்
நான்
தொடங்கும் ...
ஒவ்வொரு
நாளும்
புது வருடம்தான்.....
எனக்கு..

புத்தாண்டு

என்
நாட்பூக்களில்
நல்ல
நட்புக்களை
அதிகம்
பூக்கவைத்தாய்...
அன்புள்ளங்களோடு
அரவணைத்து
ஆனந்தப்பட்டாய்...

பழைய
நாட்களைப்
போல்
வரும்
நாட்களும்
ஆண்டுகளும்
இனிதாய்
உங்களைப்போல்..

இனிய
புத்தாண்டே
வருக
இன்பத்தை
மட்டும்
தருக...
புத்தாண்டு
வாழ்த்துக்கள்...

அன்புடன்
வீ.சு.சரவணமணி
பொதுப்பணித்துறை
98427 66788...

Wednesday, July 18, 2018

எழுதிங்கள்

கண்ணே
கண்மணியே
கனியமுதே
குலவிளக்கே
குலம் காக்கும்
விடிவெள்ளியே...(குலமகளே)

உன்னை
சுமக்கையில்
தெரியவில்லை
நீ
ஆணா
பெண்ணா
என்று...
அன்பே
நான்
உறுதியாய்
இருந்தேன்
தேவதை
நீ
அவதரிப்பாய்
என்று...

அன்பெனும்
அமுதாய்
என்னுள்
ஆர்ப்பரித்தாய்
புது வெள்ளமாய்
புதுரத்தமாய்
பிறப்பேடுத்தாய்
எனக்குள்....

என்னை
உன்
வழிகாண
வாய்ப்பளித்தாய்...

உன்
தேகத்தை
அலங்கரிக்க
வானவில்லை
வளைத்திருந்தேன்...
விண்மீனும்
வெக்கட்பட்ட
காட்சிகள்தான்
ஏராளம்...
நிலவுக்குப்
பொறாமை
கண்மணியே
உன்னழகைக்கண்டு......

உன் மொழி என் மொழி
என் மொழி உன் மொழி
நம் மொழி
தமிழ் தானே
என் தாலாட்டும்
தமிழ் தானே...

தன்னை
மறந்து
உன்னைப்
போற்றும்
தகப்பனும்
நீ
அறிவாய்...

ஆனந்த
கண்ணீராய்
பொங்கிடும்
நீருற்றாய்
அன்பின்
அலப்பரிய
அப்பா
உன்
கையிடுக்கில்...

அண்ணன்
ஒரு
மந்திர சொல்
நீ
உச்சரிக்கும்
சத்ததில்
சாபங்கள்
விலகிவிடும்...
வலி யாவும்
நீங்கிவிடும்
உன்
அண்ணன்
உனக்கானவன்....

கொலுப்பூச்சிகள்
ஒலிக்க
குறுநடை
நடந்து
என்
நெஞ்சத்தை
வருடும்
என்
அன்னையே....

இயற்கையின்
இடைவிடா
நிகழ்ச்சிகளில்
உன்
வளர்ச்சி
பெரும்
வளர்ச்சி....

உள்ளங்கை
குழிவிருந்து
இறக்கிவிடு
எனத்துடித்த
விதைகள்
போல்
விரியமாய்
வளர்கிறாள்
என்
செல்லமகள்....

பேதை
நீ
இன்று
பெதும்பையானாய்...

நன்நாளாய்
வந்தது
உன்
எழுதிங்கள்
சீராட்டு....

உற்றார்
உறவினர்
சொந்தங்கள்
புடைசூழ
குறித்த
நன்னாளில்...

சந்திரன்
தலைதூக்கும்
மாலை
மதிநேரம்
நம்
அருமைக்காரர்
முகூர்த்தக்கால்
நட்டுவைத்தே
இந்த
எழுதிங்கள்
வைபோகம்
அரங்கேற்றம்
ஆரம்பம்....

கற்பு குலையா
வேற்ற குலையா
காப்பு குலையா
வம்சம்
ஆல்போல்
தழைத்து
அருகுபோல்
வேறுன்றி....

பட்டிமரவு
எலந்த மரம்
குடைமரவு
நுகம்
கொலவு
குழவிலிங்கம்
உரல்லிங்கம்
அம்மி
நிறைக்குடம்
பொடைச்சட்டி
வானைச்சட்டி
உடனாய்
உன்
அண்ணன்
தம்பிகளை
அழைத்து
என்
தாய்வீட்டில்
கண்மணி
உனக்கு
புதுமணி
நீ
உடுத்த
விரத விருந்து
வைத்து....

புதுப்பானை
போற்றியேடுத்து
என்
வம்ச
எழுதிங்கள்காரிகள்
ஏழு கிணற்றுநீரேடுத்து
கங்கணம் கட்டி
மூன்று முறை
அரிசிபோட்டு
கணபதி
பூசை செய்து..

வாசல்
தொளித்து
வண்ணக்
கோலமிட்டு
செம்மண்
கரைகட்டி
பூமகளே
உனக்கு
வெற்றிலை
பாக்கு வைத்து...

ஐந்துபடி
திணை
மாவில்
நீர்விட்டு
நன்குறுட்டி
இருகூராக்கி
இடையே
அச்சுவெல்லமிட்டு
மாவால் மூடி
அரச இலையிட்டு
உன்
அண்ணன்
பொடைசட்டி
எடுத்து
அடுப்பில்
கோதைமாவை
வேகவிட...
குமரி உன்னை
மர உரல்
முன்னிறுத்தி
உன்
அண்ணன்
எலந்தமுள்
குடை பிடிக்க
நாவிதன்
கொழுமுளை காய்ச்சி
கனியமுதே
வெண்மணியே
உன்முன்
வைத்து
சுடச்சுட
மோர்விட
மங்களமே
மணிமேகலையே
உன்
மணிக்காலால்
உரலை
உதைத்து
உள்
வந்தாய்.....

நங்கை
கொழுந்தியாள்
என
நால்வரும்
புடைசூழ
குழவிகல்
எடுத்து
உன்
மடியிலிட்டு
ஆக்கைக்கு
நீருற்றி
பட்டிமாவு
பந்தலில்
விரதம்
முடித்து
விருந்து
வைத்தோம்...
விருந்தோம்பல்
விடைபெற்று
அதிகாலை
அடி எடுக்க...
அருமைக்கு
நீயிருக்க
அருமைக்காரி
உடனிருக்க...

வீட்டுவாசல்
நிலவுமேல்
பேழை
கூடையில்
வைத்திருந்த
கோதைமாவை
கோடாரி
துணை
கொண்டு
இரு கூறாய்
பிளந்தாய்
நீயும்...

மா நடுவில்
செங்கல்லாய்
இருமாப்பாய்
நீ
வைத்த
வெல்லமும்
கரையாமல்
உன்
கற்புக்கு
களங்கரையாய்
வேளிர்
குலம்
காத்தாய்
என்
குலமகளே....

சீர்காரி
நீ
சமைத்து
நம்
சொந்தங்கள்
சுவையாற
எழுதிங்கள்
முடிந்தது
சீரும்
சிறப்பாய்....

Thursday, June 14, 2018

காற்று

காற்றும்
காதலும்
அப்படி
தான்
கடந்த பின்னும்
வாசம்
வீசிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில்
இறக்காதப்
பக்கங்கள்...
நான்
இறந்தபின்னும்

நான்

நான்
காணும்
வண்ணங்களும்
வடிவங்களும்
நின்னை
ஆர்பரித்து
என்னுள்
உன்னை
சேர்கிறது...

கனவுக்குள்
வாழ்வைத்
தொலைத்து
கண்களுக்குள்
விடை
தோடும்
வாழ்க்கை

காற்றில்
ஆடும்
நானலைப்
போல்
நானும்...
நிஜமும்
நிழலும்
இதயத்தின்
இருபக்கம்
இருக்க
என்செய்வேன்

அறிவின்
விழம்பின்
நீயும்
காற்றின்
காதலானாய்
நானும்...

இதயத்தின்
துடுப்பே
உன்
நினைவுகளும்
நீ
தரும்
கனவுகளும்...

இதயத்தின்
இடைவெளி
இந்த
கவிதை
குறைத்திடுமோ...

இதயத்தின்
இடமாற்றம்
கவிவழி
கைகூடும்...

தனிமையின்
தவிப்பில்
நானும்...

கேள்வியின்
வேள்வியில்
நீயும்...

கண்ணாமூச்சி
வாழ்க்கை...
வானவில்
வண்ணங்கள்
நிஜமா
நிழலா?...

நிழல்தரும்
சுகங்கள்
இளைப்பாற்றல்
இல்ல
வாழ்வேது...

சரியெது
தவறெது
இதயத்தின்
இயக்கம்...

வாழ்வின்
வசந்தங்கள்
ஒருசேர
கிடைத்ததோ
உந்தன்
வடிவில்...

காத்திருப்பின்
சுகம்
அலாதி...